தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: தமிழக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,
புதிய ஒப்பந்தத்தின்படி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாயில் இருந்து ரூ.2,124 வரை சம்பள உயர்வு கிடைக்கும். அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.195 கோடி கூடுதல் செலவாகும்.
இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ள வகையில் அரசுக்கு கூடுதலாக ரூ.11 கோடி செலவு அதிகரிக்கும். இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை இனி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்றார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தின்போது போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கருணாநிதிக்கு நன்றி:
இந் நிலையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செ.குப்புசாமி, பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் ரத்தின சபாபதி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஊதிய உயர்வுக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சர் நேருவுக்கும் நன்றி கூறினர்.
பின்னர் குப்புசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்குவோம் என தேர்தல் அறிக்கையிலேயே கருணாநிதி கூறியிருந்தார். அதற்கு இப்போது செயல் வடிவம் தந்து ஊதிய உயர்வு, போனஸ், பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தொழிலாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்றார்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications