திமுகவுடன் கூட்டணி தொடரும்-காங்கிரஸ்
சென்னை: திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்திய பட்ஜெட்டை மக்கள் விரோத பட்ஜெட் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவித்ததாகவும், அந்த திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஜெயலலிதா அப்போது இந்த திட்டம் பற்றிய ஸ்கெட்சைக் கூட அனுப்பி வைக்கவில்லை.
திமுகவை மூன்றாவது அணிக்குள் இழுக்க கம்யூனி்ஸ்ட் தலைவர்கள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதைப் பற்றி திமுக ஏதும் கூறவில்லை. அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்லை. திமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications