பிரின்சிபாலுக்கு அடி, உதை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஆபாசப் படம் எடுத்த ஆசிரியரைக் கண்டிக்காத பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்களும், சிவசேனா தொண்டர்களும் முதல்வரை அடித்து உதைத்தனர். அவரது முகத்திலும் கரியைப் பூசினர்.

மும்பை, பான்டுப் பகுதியில் உள்ள கிங் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி. இங்கு பி.பி.சால்வே என்பவர் முதல்வராக இருக்கிறார். அவினாஷ் சால்வே என்பவர் ஆசிரியராக இருக்கிறார்.

7ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் அவினாஷ் மிரட்டிதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதை பலருக்கும் அனுப்பி வைத்ததாகவும், தெரிகிறது.

இந்த நிலையில் இன்று பள்ளிக்குப் பெற்றோர்களும், சிவசேனா தொண்டர்களும் திரண்டு வந்தனர். அப்போது ஆசிரியர் அவினாஷ் பள்ளியில் இல்லை. இதனால் முதல்வரைப் பிடித்து அனைவரும் அடித்தனர். அவரது முகத்தில் கரியையும் பூசினர்.

ஆசிரியர் அவினாஷ் இது போல செய்வது முதல் முறை இல்லையாம். ஏற்கனவே சில முறை இதுபோல செய்துள்ளாராம். இந்த முறை அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில்தான் அனைவரும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவினாஷ் தப்பி விட்டார், முதல்வர் சால்வே மாட்டிக் கொண்டார்.

சர்ச்சைக்குரிய அவினாஷ் சால்வே மீதும், முதல்வரைத் தாக்கியதாக பெற்றோர்கள், சிவசேனா தொண்டர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவில் நடந்த அக்கிரமம்:

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 15ம் தேதி வாக்கில், ஆந்திராவில் உள்ள ஒரு சமூக நலப் பள்ளியின் மாணவிகள் 15 பேர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரிஜி. இங்குள்ள அரசுப் பள்ளி மாணவியருக்கான விடுதியில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.

இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமாகியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+