டெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளின் 2 நாள் மாநாடு
டெல்லி: டெல்லியில், ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்திய, ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், 14 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய, ஆப்பிரிக்க கண்டத்திற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, கல்வி, மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மாநாடு குறித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அனந்த் சர்மா கூறுகையில், இந்த மாநாட்டில், தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, பர்கினா பாசா, காங்கோ, எத்தியோப்பியா, கானா, லிபியா, செனகல், கென்யா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய வரைவு நடவடிக்கைத் திட்டம் பங்கேற்கும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு முன்பாக ஏப்ரல் 4ம் தேதி சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் கூட்டமும், 7ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடும் நடைபெறும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications