மிரட்டல் வழக்கில் சுபா. இளவரசன் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுபா. இளவரசன் விடுதலை செய்ப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலை இயக்க தலைவராக உள்ள சுபா. இளவரசன் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் , மிரட்டல், கொள்ளை, போன்ற பல வழக்குகள் உள்ளன.

மேலும், அரியலூரைச் சேர்ந்த டாக்டர் சின்னசாமியின் வீட்டில் கடந்த 1999 ம் ஆண்டு புகுந்து சுபா. இளவரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 22 பேர் தங்கள் இயக்க வளர்ச்சிக்கு ரூ 1 லட்சம் பணம் தேவை என்றும், அதை தராவிட்டால் டாக்டரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக ஜெயகொண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சுபா. இளவரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பரஞ்சோதி முன்னிலையில் நடந்து வந்தது. சுபா. இளவரசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படாததால் சுபா. இளவரசன் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்திரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+