லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு டிஸ்மிஸ்
தூத்துக்குடி: லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அடிதடி வழக்கு தொடர்பாக கடந்த 2000ம் ஆண்டு புளியம்பட்டி போலீசில் புகார் செய்ய சென்றார். இந்த வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அப்போது, இன்ஸ்பெக்டராக இருந்த கனகசபாபதிக்கு ரூ.1000, ஏட்டு சிவராமனுக்கு ரூ.200 லஞ்சமாக கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் கணேசன் புகார் செய்தார்.
லஞ்ச ஓழிப்பு துறை டிஎஸ்பி மலுக்முதலி தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர். லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் கனகசபாபதியையும், ஏட்டு சிவராமனையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. தற்போது இன்ஸ்பெக்டர் கனகசபாபதி சோழவந்தானிலும், ஏட்டு சிவராமன் திருச்சி மாவட்டம் வையம்பட்டியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் துறை ரீதியான நடவடிக்கையாக இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications