ராமதாஸ் காரை போதையில் வழி மறித்த வாலிபர்கள்!

விழுப்புரம் மாவட்டம் நல்லாவூர் என்ற கிராமத்தில் டாக்டர் ராமதாஸின் உறவினர் ஒருவர் மரணமடைந்து விட்டார். இதையடுத்து துக்கம் கேட்க ராமதாஸ் காரில் நல்லாவூர் சென்றார்.
அவரது கார் தைலாபுரம் தோட்ட இல்லத்திலிருந்து கிளம்பி சென்றபோது சாலையில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள், ராமதாஸின் காருடன் மோதுவது போல வந்தனர்.
அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை அடிக்க ராமதாஸ் காருக்கு முன்னால் சென்ற வாகனங்களில் இருந்த பாமகவினர் முயன்றனர்.
ஆனால் இருவரும் குடிபோதையில் இருப்பதால் விட்டு விடும்படி ராமதாஸ் கூறவே தொண்டர்கள் பேசாமல் இருந்தனர்.
ஆனால் குடிகார வாலிபர்கள் தொடர்ந்து ராமதாஸ் காருடன் மோதுவது போல வந்து காருக்கு முன்னால் குறுக்கிட்டு காரை நிறுத்தினர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து பாமகவினர் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை விட்டு விடும்படி ராமதாஸ் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டதால், போலீஸார் இருவரையும் எச்சரித்து விட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications