'விஷு'-மலையாளிகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மலையாளப் புத்தாண்டையொட்டி மலையாள மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியன் மாறும் நாளான விஷு திருநாளை மேள, தாளம் முழங்க உற்சாகத்துடன் கொண்டாடும் மலையாள பெரு மக்களுக்கு எனது மனம் நிறைந்த விஷு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பண்பாட்டையும், மரபையும் பேணி வாழும் மக்கள் மலையாள பெரு மக்கள். கண்ணாடி, அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விஷுக் கனியை அதிகாலையில் கண்டு, இறைவனை வழிப்பட்டு, அறுசுவை உணவை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து விருந்துண்டு மகிழ்வது மரபு.
இந்தப் புத்தாண்டு இனிமையும், இன்பமும் இல்லந்தோறும் கொழிக்கின்ற ஆண்டாக மலரட்டும் என்று தெரிவித்து, எனது விஷு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.