போலி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளி சிறையில் திடீர் மரணம்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளி திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக வீடுகள் கட்டித் தருவதாக பெரும் பண மோசடியில் ஈடுபட்டதாக வேலூர் கல்வாரி மிஷனைச் சேர்ந்த போலி பிஷப் யோபு சரவணன் கைது செய்யப்பட்டார்.
யோபுவின் கூட்டாளிகள் சிலரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பாஸ்கர் என்கிற டேவிட் பாஸ்கர் (50).
இந்த நிலையில், விளாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவலு என்கிற ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 3 லட்சத்திற்கு புரோ நோட்டுக்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து கேசவலு போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் அவரக் கைது செய்தனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஸ்கர், நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாஸ்கர் இறந்தார்.












Click it and Unblock the Notifications