பணவீக்க உயர்வு குறித்து பீதி தேவையில்லை - ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்று ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பணவீக்கம் அதிகரிப்பு என்பது சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்று. நமது நாடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல இது. உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் உயருகிறது.
7.4 சதவீதம் என்ற அளவிலிருந்து 7.1 சதவீதம் என்ற அளவுக்கு பண வீக்கம் குறைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதைப் பார்த்து நாம் யாரும் பீதி அடையத் தேவையில்லை. குறைந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது, கூடினால் பீதி அடையவும் கூடாது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications