புலிகளுக்கு உதவி-லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

இவர்களை லண்டன் மற்றும் வேல்ஸ் நகர தீவிரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் புலிகளுக்கு தருவதற்காக பணம், கருவிகள், ஆயுதங்கள் குறித்த மேனுவல்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் புலிகளுக்காக பணம் திரட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவர் நியூ டவுனைச் சேர்ந்தவர்கள், இன்னொருவர் மிட்சாம் பகுதியில் வசித்து வந்தார். இவர்களிடம் சென்ட்ரல் லண்டனில் உள்ள பட்டிங்டன் க்ரீன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த நவம்பரில் இலங்கை அரசு வழங்கிய தூதரக பாஸ்போர்ட்டுடன் லண்டன் வந்த கருணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications