மத்திய அரசு விழாவில் எம்எல்ஏ புறக்கணிப்பு-மதிமுக கொதிப்பு
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக மதிமுக எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் கொதித்து போயுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மத்திய விமானத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
விழா அழைப்பிதழில் அதிமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் மதிமுகவை சேர்ந்த திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ வீர. இளவரசன் பெயர் மட்டும் இல்லை. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் கொதித்து போயுள்ளனர்.
இந்த அரசு மதிமுக என்ற கட்சிக்கு மரியாதை தர வேண்டாம். அதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் வீரஇளவரசன் பெயரை அழைப்பிதழில் போட்டிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர். அழைப்பிதழும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதை பொது செயலாளர் வைகோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவரது உத்தரவு கிடைத்தவுடன் போராடத்தில் இறங்கப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications