For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூறாவளிக் காற்று-முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கிய 'சேது' கப்பல்கள்

By Staff
Google Oneindia Tamil News

Dredging Ship
திருவாரூர்: சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரு கப்பல்கள் கடலில் நிலவிய பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கரையில் ஒதுங்கின.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தோவை வாய்க்கால் எனப்படும் முகத்துவாரப் பகுதியில் நேற்று இரு பெரிய கப்பல்கள் கரை ஒதுங்கின.

அக்கப்பல்களில் யாரும் இல்லை. பெரிய அளவிலான இரு கப்பல்கள் தரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்கக் கூடுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவை இரண்டும் சேது சமுத்திரத் திட்ட கால்வாய்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் எனத் ெதரிய வந்தது. அகழ்வுப் பணியின்போது மண் அள்ளும் பணியில் இக்கப்பல்கள் ஈடுபட்டிருந்தன. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இரு கப்பல்களும் கரை ஓரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

கடலில் வீசிய சூறாவளிக் காற்றினால் இரு கப்பல்களும் முத்துப்பேட்டைக்கு இழுத்து வரப்பட்டுள்ளன என்று ெதரிய வந்தது. இதையடுத்து பதற்றம் குறைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X