பள்ளிகள் அருகே செல்போன் டவர் அமைக்க தடை

இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 19 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் நிலையும் உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு செல்போன் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். இதனால் பல மாநகரங்கள் செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்பால் திணறி வருகின்றன.
செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய தொலைத்தொடர்பு துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிக் கூடங்களுக்குஅருகிலும், பள்ளிக் கட்டடங்களிலும் செல்போன் கோபுரங்களை அமைக்க தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டுமனால் முதலில் அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், செல்போன் கோபுரங்கள் இடம் பெறும் கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து 3 மீட்டர் உயரத்தில்தான் கோபுரங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications