படித்த பள்ளிக்கு நிதி உதவிய முன்னாள் மாணவர்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: தான் படித்த பள்ளிக்கு பெரும் நிதியுதவி செய்துள்ளார் முன்னாள் மாணவர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ளது கல்லல். இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான பரிமளம் பொறியியல் பட்டம் பெற்று இப்போது ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
தான் பயின்ற பள்ளிக்கு ரூ.30,000 மதிப்பில் குடிநீர் தொட்டி, மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை வழங்கியதுடன் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். மேலும் ரூ.2.5 லட்சம் செலவில் கலையரங்க மேடையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications