தேசிய ஒருமைப்பாட்டுக்கான சர்வ மத மாநாடு
சென்னை: அஹமதியா முஸ்லீம் ஜமாத் அமைப்பின் நூற்றாண்டையொட்டி சென்னையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சர்வ மத மாநாடு நடந்தது.
அஹமதியா முஸ்லீம் மிஷன் அமைப்பு இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கான சர்வதேச இயக்கம் இது.
இந்த மாநாட்டில் 7000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றதாக அதன் உறுப்பினர் அகமது அல்டாப் தெரிவித்தார்.
இந்து மதம், கிறிஸ்தவம், புத்த மதம், சீக்கிய மதம் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மதங்களில் மனித நேயம் என்பது குறித்து சிறப்புரையாற்றினர்.
மாநாட்டை, உலகளாவிய அஹமதியா இயக்கத்திற்கான இந்தியப் பிரிவு தலைவர் நாம் கோரி தொடங்கி வைத்தார்.
மாநாட்டையொட்டி 1000க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச உணவும், 800க்கும் மேற்பட்டோருக்கு ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் அன்பு, எவரிடமும் வெறுப்பின்மை என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications