காரில் உடலுறவு-தோஹாவில் இந்தியர் கைது
தோஹா: தோஹாவில் காரில் 45 வயது இந்திய வேலைக்காரப் பெண்ணுடன் செக்சில் ஈடுபட்ட 23 வயது இந்தியர் கைது செய்யப்பட்டார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் ஆள் நாட்டமில்லாத ஓரிடத்தில் நின்றிருந்த காரை அந் நாட்டு போக்குவரத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்தனர்.
அந்தக் காரில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் பிடித்து சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரிலிருந்து காண்டம்களும் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அந்தப் பெண் வீட்டு வேலை செய்பவர் எனத் தெரிய வந்தது.
ஆனால், செக்சில் ஈடுபடவில்லை என இருவரும் மறுத்துள்ளனர்.
அந்தப் பெண் கூறுகையில், நான் சர்ச்சிலிருந்து வீடு திரும்ப நண்பருடன் காரில் சென்றேன். அவர் என் சகோதரர் மாதிரி. அவருடன் நான் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடவில்லை. காரின் சீட் சாய்ந்திருந்ததால் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications