For Daily Alerts
Just In
இந்திய படைகள் மீது பாகி்ஸ்தான் மீண்டும் தாக்குதல்
ஜம்மூ: காஷ்மீரில் இன்றும் பாகிஸ்தானியப் படைகள் இந்தியாப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரியா என்ற பகுதியில் இந்த கண்காணிப்பு மையத்தின் மீது பாகி்ஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டன.
கடந்த 3 நாட்களில் இந்திய எல்லைக்குள் பாகி்ஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது இது இரண்டாவது முறையாகும்.
நேற்று முன் தினம் பாரமுல்லா அருகே நவ்காவ்ன் என்ற இடத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வீரர்கள் திடீரென ஊடுருவி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, July 30, 2008, 15:10 [IST]