திருச்சி போலீஸில் காதல் ஜோடி தஞ்சம்
திருச்சி: பெங்களூர் போலீசார் தேடி வந்த காதல் ஜோடி திருச்சி போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பெரியசாமியின் மகன் வெங்கடேஷ் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் வேதா (18).
இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த வேதாவின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் வேதா தனது காதலை விடவில்லை. இதனால் கோபமடைந்த அவரது பெற்றோர், வேதாவை பெங்களூரிவில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.
இந் நிலையில் கடந்த 6ம் தேதி வேதா காணமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வேதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி பஸ் நிலையம் அருகில் சுற்றித்திருந்த வெங்கடேஷ்-வேதாவை திருச்சி போலீசார் பிடித்து விசாரித்தனர். காதல் ஜோடி விஷயத்தை கூறியதும், பெங்களூர் போலீசாருக்கு திருச்சி போலீசார் தகவல் கொடுத்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications