போலீசுக்கு கொலை மிரட்டல்-காங். பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற செங்கோட்டை போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜகோபால். இவர் செங்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சம்பவத்தன்ற ஏட்டுகள் மாரிமுத்து, முத்தையா, போலீஸ்காரர் ராஜதுரை ஆகியோர் பிரானூர் பார்டரில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த ராஜகோபால், போலீஸாரை மடக்கினார். உங்கள் இன்ஸ்பெக்டர் மணல் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க நீங்கள் மூவரும்தான் காரணம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் மூவரும் செங்கோட்டை போலீஸில் புகார் கொடுத்தனர். எஸ்ஐ மங்கையர் அரசி விசாரணை நடத்தி ராஜகோபாலை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications