சிறுமி கற்பழித்து கொலை-மக்கள் மறியல்
சத்தியமங்கலம்: சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க ஆதி திராவிட இளைஞர்களை போலீஸார் விசாரித்ததை கண்டித்து சத்தியமங்கலத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் தலித் மக்களின் காலனி பகுதியை சேர்ந்தவர் புனிதா (13). இவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க காலனியில் வசிக்கும் சிலரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீஸார் விசாரிக்க இருந்தனர்.
இதனையறிந்த காலனி மக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.
உண்மையான குற்றவாளியை பிடிக்காமல் வழக்கை திசை திருப்ப காலனி ஆண்கள் மீது வழக்கு போட உள்ளதாக போலீஸாரை அவர்கள் குறை கூறினர். பின்னர் காவல் நிகூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை முடிந்த உடனே அவர்களை விடுவிப்பதாக போலீஸார் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 10 பேரை போலீசார் விடுவித்தனர். இதையடு்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications