'மாயமான' வாலிபர் ஹெராயின் வழக்கில் கைது
சென்னை: காணாமல் போனதாகக் கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்களில் ஒருவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் அலி, ரபீக், ஷாஜகான், முகம்மத். இந்த 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு திருமணத்துக்கு செல்வதாகக் கூறிச் சென்றனர். ஆனால், வீடு திரும்பாமல் மாயமாயினர்.
இந்நிலையில் ஜாபர் அலி தனது தந்தை சவுகத் அலிக்கு போன் செய்து தன்னையும் நண்பர்களையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளதாகவும், பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பீதியடைந்த பெற்றோர் போலீசில் புகார் தந்தனர். இவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
விசாரணையில், ஜாபர் அலி திருச்சி போலீசாரால் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த திருமுருகன், ஏழுகிணறை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரும் ஹெராயினுடன் பிடிபட்டுள்ளனர்.
மாயமான மற்ற 3 பேரும் எங்குள்ளனர் என்று தெரியவில்லை. அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாக ஜாபர் அலி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications