பாளை-வாணியம்பாடி: ஹஜ் பயணிகளுக்கு பயிற்சி
நெல்லை: ஹஜ் பயணிகளுக்கான பயிற்சி முகாம் பாளையங்கோட்டை மற்றும் வாணியம்பாடியில் நடந்தது.
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்லுவோருக்கான பயிற்சி முகாம் நெல்லையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 248 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள ஹஜ் கமிட்டியின் அலுவலர்கள் ஆமீம், நயினா முகம்மது ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஹஜ்ஜில் செய்யப்படும் தொழுகை, பயண விதிமுறைகள் குறித்து ஹஜ் பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
அதேபோல தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் வாணியம்பாடியிலும் பயி்ற்சி முகாம் நடந்தது. ஹஜ் யாத்திரை செல்லும் 100 பேருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நீலிக்கொல்லை மதராஸ முபீதே ஆஜம் பள்ளியில் கடந்த 28ம் தேதி நடந்தது.
செளவுதி அரேபிய இதய மருத்துவ நிபுணர் டாக்டர் கனி ஏஜாஸ் அகமத் தலைமை வகித்தார். ஹஜ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் அன்வருல்லா ஹாஜி வரவேற்றார்.
பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து இக்பால் அகமத், ஆசிப் ஆகியோர் படக்காட்சிகளுடன் விளக்கமளித்தனர்.












Click it and Unblock the Notifications