பள்ளி-கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் கட்டாயம்
சென்னை: பள்ளி, கல்லூரிகளின் வேன், பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகிய வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் பயணிக்கும் வாகனம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதுமே கல்வி நிலைய வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை இந்த ஆண்டே அமல்படுத்துமாறு கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஞ்சள் வண்ணம் பூசுவதோடு பக்கவாட்டிலும் வாகனத்தின் முன்னும், பின்னும் பள்ளி பேருந்து, கல்லூரி பேருந்து என்பதை சுட்டிக் காட்டும் படமும் வரையப்பட வேண்டும். 60 செ.மீ. விட்டத்தில் குழந்தைகள் நடந்து செல்வது போன்ற படம் இடம்பெற வேண்டும்.
இந்த வாகனங்கள் செல்லும் போது அதன் பின்னாலும், பக்கவாட்டிலும் செல்லும் மற்ற வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications