தீவிரவாதம்: இனியும் பொறுமை கூடாது-அத்வானி
Subscribe to Oneindia Tamil

கடந்த 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகளின் முக்கிய எதிரியாக அமெரிக்கா உள்ளது. ஆனால் செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கவே இல்லை. ஆனால் நாம் மட்டும் ஏன் தீவிரவாத தாக்குதலால் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம் என்பதை அறிய வேண்டும்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் மக்கள் கொஞ்சமும் பொறுமை காட்டக் கூடாது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications