நாங்குநேரியில் தேவர் சிலை அவமதிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேவர் சிலையை மர்மந பர்கள் சிலர் அவமதித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி பஸ் நிலையம் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

தகவலறிந்த நெல்லை எஸ்பி தினகரன், நாங்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். சிலையை அவமதித்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சிலையை அவமதித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+