லேமென் பிரதர்ஸ் விவகாரம்: பாதிப்பில்லை என்கிறது ஐசிஐசிஐ
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 3, 2008 அன்றைய நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மொத்த சொத்து மதிப்பு ரூ.4,84,643 கோடி.
அதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி-யுகே பிஎல்சியின் (ஐசிஐசிஐயின் பிரிட்டன் கிளை) சொத்து மதிப்பு 8.7 பில்லியன் டாலராக உள்ளது.
லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிஎல்சிதான் 57 மில்லியன் யூரோ (தோராயமாக 80 மில்லியன் டாலர்) அளவுக்கு முதலீடு செய்துள்ளது.
இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி யுகே பிஎல்சியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகும்.
இந்த பத்திரங்களுக்கு எதிரான முதலீட்டில் 12 மில்லியன் டாலருக்கு நிகரான ஒதுக்கீட்டை (ரூ.54 கோடி) ஐ.சி.ஐ.சி.ஐ.-யுகே பிஎல்சி ஏற்கனவே பெற்று விட்டது.
மேலும் 50 சதவீத திரும்பப் பெறும் வாய்ப்பை கணக்கிட்டால் தேவைப்படும் கூடுதல் ஒதுக்கீடு என்பது 28 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும்.
எனவே லேஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி-யுகே பிஎல்சிக்கோ வேறு எந்த பாதிப்பும் இல்லை.
இதை முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், லேமென் பிரதர்ஸ் நிறுவனம் திவால் ஆனதால் ஐசிஐசியையும் திவாலாகிவிட்டதாக நாடு முழுவதுமே நேற்று வதந்தி பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கியில் போட்ட பணத்தை எடுத்துள்ளனர்.
இதனால் அந்த வங்கியியின் ஏடிஎம்களில் பெரும் கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.