சென்னை மாநகராட்சி-2 வார்டுகளிலும் திமுக வெற்றி

வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.
இதில் சென்னை மாநகராட்சியின் 44வது (பூங்கா நகர்), 18வது (ராயபுரம்) வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
44வது வார்டில் திமுக வேட்பாளர் நடராஜன் 3,049 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த பிரதாப்குமார் 1,261 வாக்குகள் பெற்று தோற்றார்.
இந்த வார்டில் போட்டியிட்ட சுரேஷ் ஜெயின் (பாஜக)- 522 வாக்குகளும், பாஸ்கரன் (பகுஜன் சமாஜ்) -487 வாக்குகளும் பெற்றனர்.
18வது வார்டிலும் திமுக வெற்றி:
18வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 2,159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த சேகர் 1,553 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
2 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டர்.
ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக வெற்றி:
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்தக் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம் 1,754 வாக்குகளும், திமுகவைச் சேர்ந்த கஸ்தூரி 1,639 வாக்குகளும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications