தயாராகிறது டிஜிட்டல் சென்னை!

திட்டமிட்டப்படி இப்பணிகள் முடிவடைந்துவிட்டால் எதிர்காலத்தில் பழுது பார்க்கும் பணி குறைந்த நேரங்களிலேயே முடிவடைந்துவிடும்.
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சாரவாரியம், சென்னை காவல்துறை ஆகியவை இணைந்து இப்பணியை மேற்கொண்டிருக்கின்றன.
முதல் கட்ட பணியாக சென்னையை, பூகோள ரீதியாக ஹெலிகாப்டரிலிருந்து படமெடுத்து முடித்துள்ளது, தேசிய தொலையுணர்வு நிறுவனம்.
சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படங்களைத் தொகுத்து டிஜிட்டல் மயமாக்கும் பணியில் இந்திய அளவியல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதோடு நில்லாமல் ஆட்களை அனுப்பி அங்குல இடம் கூட விடாமல் தகவல் சேகரிக்கும் பணியும் நடைபெற இருக்கிறது.
முதலில் பெரம்பூர், வியாசர்பாடி பகுதியில் சேகரிக்கப்பட்ட விரிவான தகவல்களைக் கொண்டு டிஜிட்டல் வரைப்படத்தை தயாரிக்க தனியார் நிறுவனங்களிடம் சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications