அமைச்சர் இளங்கோவன் அவமதிப்பு: ஏர்போர்ட் அதிகாரி ட்ரான்ஸ்பர்
கோவை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அவமதிப்பு செய்த விவகாரத்தில் கோவை விமான நிலைய பெண் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த 14ம் தேதி மண்டல பாஸ்போர்ட் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை வரவேற்பதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்வேந்தன் எம்பி் ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்றனர்.
அப்போது அமைச்சர் இளங்கோவனுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரி ஹேமலதா மீது அமைச்சர் இளங்கோவன் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுபடேலிடம் புகார் செய்தார்.
இந் நிலையில் ஹேமலதா அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மங்களூர் விமான நிலைய அதிகாரி வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications