வடிவேலு மீது நடவடிக்கை: விஜயகாந்த் மேலாளர் வழக்கு

நடிகர் விஜயகாந்த்திடம் மேலாளராக இருப்பவர் சதீஷ் குமார். கடந்த ஆண்டு வடிவேலு அலுவலகம் மீது தேமுதிகவினர் தாக்குதல் நடத்தியதாக வடிவேலு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சதீஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் வடிவேலு வீடு மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் தரப்பில் வடிவேலுவுக்குப் பதிலடியாக உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. சதீஷ்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை வடிவேலு தாக்கினார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் இதுவரை அதன் மீது நடவடிக்ைக எடுக்கவில்லை.
நான் கொடுத்த புகாரை வரைந்து விசாரித்து நடவடிக்ைக எடுக்க விருகம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விரைந்து விசாரித்த முடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
விஜயகாந்த் தரப்பினரின் இந்த புதிய வழக்கால் வடிவேலு - விஜயகாந்த் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications