லாரி கவிழ்ந்து ரூ10 லட்சம் கண்ணாடி நாசம்
தென்காசி: லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. நெல்லை மாவட்டம் புளியரை எஸ் வளைவு வழியாக நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.
சாலை மிகவும் மோசமாக இருந்ததால் டிரைவர் சிரமப்பட்டு லாரியை ஓட்டினார். அப்போது நெல்லையில் இருந்து புனலூருக்கு சுண்ணாம்பு பவுடர் ஏற்றி சென்ற மினிலாரி பின்னால் வந்து கொண்டிருந்தது.
திடீரென்று நிலைதடுமாறிய கண்ணாடி லோடு லாரி மினிலாரி மீது கவிழ்ந்தது. இதில் இரண்டு லாரிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இதில், லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இந்த விபத்து காரணமாக இப் பாதையில் சுமார் 3 மணி நேரம் தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications