திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாசா: திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிர்கிஸ்தான், சீனாவில் நேற்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் கிர்கிஸ்தானில் 70க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலும் நேற்று இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
திபெத் தலைநகர் லாசா, ஜிடார், டாம்சங் பகுதிகளில் ஏராளமான வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பல்வேறு மலைபாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ராணுவத்தினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications