கடலூர்: பஸ்-வேன் மோதலில் 5 பேர் பலி
கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் அரசுப் பேருந்தும், டாடா சுமோ வேனும் மோதிக் கொண்டதில் இரண்டு பொறியாளர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு இந்த விபத்து நடந்தது. வேனில் வந்தவர்கள் வெளியூர் போய் விட்டு கடலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். செம்மங்குப்பம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த வேனை முந்த முயன்றார் டாடா சுமோ வேன் டிைரவர்.
அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தாறுமாறாக ஓடியது. இதில் எதிர்புறம் வந்த அரசுப் பேருந்தின் மீது வேன் மோதியது.
இதில் பொறியாளர்கள் பங்கஜ் குமார் (24), சதீஷ் குமார் (24), கார் டாடா சுமோ டிரைவர் மதன் (25), அவருடையஉதவியாளர் சிவக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இன்னொருவர் ஆகியோர் பலியானார்கள்.
சிப்காட் தொழிற்பேட்டையில் சதீஷ் குமாரும், பங்கஜ் குமாரும் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தவர். பங்கஜ் குமார் பீகாரைச் சேர்ந்தவர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் ஜிப்மர் மருத்துவமனைக்கும், 2 பேர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications