கேரளாவுக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்
செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்தப்பட்ட 30 மூடை ரேஷன் அரிசி மற்றும் அதைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கேரள எல்லையான செங்கோட்டை வட்டார பகுதிகளிலிருந்து பஸ், ஆட்டோ போன்ற வாகனங்களில் கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி, போலீசார் ஜோஸ்குமார், அணில் குமார், முத்துமுருகன், சரவணகுமார் பார்த்தசாரதி, ஆகியோர் மாறுவேடத்தில் புளியரை, பண்பொழி, மேக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்கோட்டையிலிருந்து மேக்கரை நோக்கி வந்த ஒரு பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த ஆட்டோவில் 3 மூடை ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
ஆட்டோ டிரைவர் ஜலால் என்ற பஞ்சர்பாய், ஆட்டோவில் இருந்த சைத்தான் சாகுல், நவுசாத் ஆகியோரிடம் ஆகியோரிடம் விசாரித்ததில் ரேசன் அரிசியை வாங்கி மொத்தமாக கேரளாவுக்கு கடத்துவதும் மேக்கரை அருகே ஒரு குடோனில் 27 மூடை ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 27 மூடை ரேசன் அரிசியையும் பறி்முதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications