இலங்கை குண்டு வீச்சில் குமரபுரம் முருகன் கோவில் சேதம்

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: இலங்கை விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் கிளிநொச்சி அருகே உள்ள குமரபுரம் முருகன் கோவில் சேதமடைந்துள்ளது.

கிளிநொச்சியைச் சுற்றிலும் இலங்கைப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. சரமாரியாக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவித் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கை விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் பரந்தன், பூநகரி ஆகிய பகுதிகளில் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின. இதில் பரந்தன், குமரபுரம் என்ற இடத்தில் உள்ள பழமையான முருகன் கோவில் பெரும் சேதமடைந்தது.

கோவிலின் மேற் பகுதியும், சுற்றுச் சுவரும் கடும் சேதமடைந்துள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள வீடுகள், கடைகள் தரைமட்டமாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+