சேலம் அருகே ரவுடி என்கெளன்டரில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்: நாமக்கல்லைச் சேர்ந்த ரவுடி, சேலம் அருகே இன்று போலீஸாரால் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாமக்கல்லை அடுத்த மல்லசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). ஏராளமான கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளன.
இவரைப் போலீஸார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் கோபிநாத் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது போலீஸாரைத் தாக்க முயன்றார் கோபிநாத். அதில் இன்ஸ்பெக்டர் காந்திக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் துணை ஆணையர் ஜான் நிக்கல்சன், கோபிநாத்தை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் குண்டுக் காயம் பட்டு கோபிநாத் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications