தீவிரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை?
மும்பை: மும்பையில் 2 முக்கிய ஹோட்டல்களில் அமெரிக்கர்கள், இங்கிலாந்து நாட்டினர், இஸ்ரேலியர்கள், பிரேசில் நாட்டவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக உள்ள நிலையில் தீவிரவாதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
டிரைடண்ட் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஆகிய ஹோட்டல்களில் இவர்களை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாக வைத்துள்ளனர்.
தீவிரவாதிகளைத் தாக்க கமாண்டோக்கள் தயார் நிலையில் இந்த ஹோட்டல்களை சுற்றி வளைத்திருந்தாலும் முழு அளவில் தாக்குதல் நடத்தவில்லை. இதனால் தீவிரவாதிகளுடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் வெளிநாட்டினரின் உயிரைக் காக்க தீவிரவாதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளதாக ஒரு வெளிநாட்டுத் தூதர் கூறியதாக செய்திகள் வருகின்றன.
இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் சில நிமிடங்களுக்கு முன் பயங்கர குண்டு சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை சத்தமும் கேட்கிறது.
இதற்கிடையே மூத்த அமைச்சர்களுடன் டெல்லியில் பிரதமரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனாலும் பேச்சு நடப்பதாகவே தெரிகிறது.
சிறைகளில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க கோரிக்கை:
பிணயக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் இந்திய சிறைகளில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் கோரி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications