ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
களக்காடு: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள பூதத்தான்குடியிருப்பு, புலவன்குடியிருப்பு கிராமங்களில் 13 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இவை இரவு நேரங்களில் அங்குள்ள பனை மரங்களை சாய்த்து சேதப்படுத்துகின்றன. கடந்த இரு தினங்களில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை சாய்த்துள்ளன. மேலும் இரவில் வயல்களில் காவல் காக்கும் விவசாயிகளையும் துரத்துகின்றன.
இதையடுத்து வனத்துறையினர் 20 பேர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் இரவில் தீவிர ரோந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி, ராட்சத விளக்குகள் உதவியுடனும் தீப்பந்தங்கள் ஏந்தியும் யானைகள் நடமாட்டம் உள்ள மலையடிவார பகுதிகளில் விடிய விடிய ரோந்து செல்கின்றனர்.
அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications