மதுரையில் மூன்று ரவுடிகள் வெட்டிக் கொலை!
மதுரை: மதுரையில் முன் விரோதம் காரணமாக மூன்று ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் முனூஸ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாரிமுத்து என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் மாரிமுத்து, தனது அண்ணன் மூர்த்தி (37), ரமேஷ் (27) ஆகியோருடன் ஹவுசிங் போர்டு காலனி அடுத்துள்ள புதர் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மாரிமுத்து உள்பட மூன்று பேர் மீதும் பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் தப்பியோட முயன்ற மாரிமுத்து, ரமேஷ் ஆகியோரை உடலின் பல இடங்களில் வெட்டி கொலை செய்தனர்.
படுகாயமடைந்த மூர்த்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதால் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலையான மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications