கோவை விமான நிலையம், டெல்லி கோர்ட்டில் வெடிகுண்டு பீதி
கோவை: கோவை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலைய வளாகத்தில் உள்ள ஒரு டிராலியில் சாக்பீஸால், குண்டுவெடிக்கும் என தமிழில் எழுதப்பட்டிருந்தது.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் விரைந்து வந்தனர்.
விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வதந்தி எனத் தெரிய வந்தது.
இந்த பரபரப்பால் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லி கோர்ட்டில் பரபரப்பு:
இதேபோல டெல்லி, தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அனாமதேய போன் அழைப்பால் பீதி ஏற்பட்டது.
இன்று காலை 9.15 மணிக்கு டெல்லி போலீஸாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
கோர்ட்டில் இருந்த அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் அந்தத் தகவல் புரளி என பின்னர் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications