கர்கரே மரணம் குறித்த அந்துலேவின் பேட்டி - ராஜ்யசபாவில் அமளி
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், மூத்த பாஜக உறுப்பினர் அலுவாலியா எழுந்து, மும்பை தாக்குதல் குறித்து மீடியாக்களுக்கு அந்துலே அளித்துள்ள பேட்டி பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆனால் இந்த சபை அதுகுறித்துக் கவலைப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்.
பொறுப்பான மூத்த அமைச்சர் பொறுப்பே இல்லாமல் பேசியுள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவர் ரஹ்மான்கான், இந்த விவகாரம் குறித்து நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள்படும் என்றார்.
ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பேசியபடி இருந்தார் அலுவாலியா. அவருக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதாதளம், அதிமுக மற்றும் சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications