திருமங்கலம் இடைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு?-ராமதாஸ் விளக்கம்!
பண்ருட்டி: திருமங்கலம் இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து, கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும் என கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியில் நடந்த ஒரு திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக வேண்டும். ஆண்கள் குடிப்பதால் பெண்கள் தான் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.
தை முதல் தேதி முதல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியை டிசம்பர் 22-ம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா பாமக என்ற கேள்விக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications