முல்லியவளை நகரை பிடித்த இலங்கை ராணுவம்
கொழும்பு: முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள முல்லியவளை என்ற நகரைப் பிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
வன்னிப்பகுதியை புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வட மாவட்டங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இங்கு விடுதலைப் புலிகள், ராணுவத்திற்கு கடும் போட்டியைக் கொடுத்து மோதி வருவதால் ராணுவத்தின் முன்னேற்றம் மிக மிக மெதுவாக உள்ளது.
இந்த நிலையில், முல்லைத்தீவுக்கு மிக அருகே உள்ள முல்லியவளை நகரில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நகரை கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்தது.
முல்லியவளை நகரில் தாக்குதல் மேற்கொண்ட ராணுவத்தின் 59வது படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பாக விமானப்படை ஜெட் விமானங்கள் மற்றும் எம்.ஐ24 ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தாகவும், அதற்கு பதில் தாக்குதல் நடத்திய புலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், முல்லிய வளைக்கு வடக்கே புலிகளின் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முல்லியவளை கைப்பற்றப்பட்டிருப்பதன் மூலம் தண்ணியூத்து என்ற பகுதியும் கைப்பற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே, இப்பகுதி வழியாக ராணுவம் தொடர்ந்து முன்னேறுவற்கு விடுதலைப் புலிகள் அமைத்துள்ள மண் அரண்கள் கடும் சவாலாக உள்ளன. ராணுவத்தினரை முன்னேறச் செய்வதும், அதிக அளவிலான வீரர்களை இப்பகுதிகளுக்கு அனுப்புவதும் சிரமமான காரியம் என ராணுவம் கூறுகிறது.
பொட்டு அம்மன் ஒதுக்கப்படவில்லை:
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாக இருக்காது என்று விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தி வரும் கருணா கூறியுள்ளார்.
அது உண்மை அல்ல. பொட்டு அம்மன் முக்கியமான தலைவர். அவரை புலிகள் ஒதுக்குவார்கள் என்பது நிஜமல்ல. அப்படி வெளியாகியுள்ள செய்திகளும் உண்மையாக இருக்காது என்று கூறினார் கருணா.
மேலும், முல்லைத்தீவு பிரிவில் இலங்கை ராணுவத்துக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். ஏனெனில் முல்லைத் தீவில் எங்காவது ஒரு பகுதியில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கக்கூடும் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications