சத்யம் வங்கி கணக்கு ஆவணங்கள் மிஸ்ஸிங்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனமும் அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத் தந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் அதிர்ச்சி... சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் முழுமையாகக் 'காணாமல்' போய்விட்டனவாம்!
சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பதிவு அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்களில், நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள் நடத்திய ரெய்டில், வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டும் ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை.
இந்த அதிர்ச்சிகரமான உண்மை, சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் அளவு ரூ.7,000 ஆயிரம் கோடிதானா... அதைவிட பல மடங்கா என்ற சந்தேகத்தை புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்படுத்திவிட்டது.
அதிர்ந்து போன நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள், சிபிஐ, செபியின் தீவிர குற்றவியல் புலனாய்வு பிரிவான Serious Fraud Investigation Office (SFIO), ரிசர்வ் வங்கி, உள்ளூர் போலீஸ் என அனைத்துத் தரப்பும் இணைந்த கூட்டு புலனாய்வு நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளது.
இன்று சத்யம் நிதித் துறைத் தலைவர் சீனிவாஸ் வாட்லாமணியைக் கைது செய்த பிறகே இதில் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடிட்டர்கள் மீது நடிவடிக்கை:
இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் இல்லாத பணத்தைத் தணிக்கை செய்த கில்லாடி தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் ஹவுஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications