பெண் பார்த்து வந்தேனே ..முத்துக்குமாரின் பாட்டி கதறல்

இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம், நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும் சென்னையில் நேற்று வாலிபர் முத்துகுமார் தீக்குளித்து உயிர் விட்டார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்துர் அருகேயுள்ள கொழுவைநல்லூர் கிராமம் ஆகும். தந்தை பெயர் குமரேசன் என்ற மகாராசன். முத்துகுமாரின் தாய் சித்திரை கனி இறந்துவிட்டார். முத்துகுமாரின் தம்பி வசந்த்குமார் விபத்தில் பலியாகிவிட்டார். சகோதரி தமிழரசிக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்துகுமாரின் பெற்றொர் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினர்.
முத்துகுமாரின் பாட்டி லிங்கபுஷ்பம் அம்மாள் மட்டும் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் வசித்து வருகிறார்.
முத்துக்குமாரின் தியாகம் குறித்து அவர் கண்ணீர் விட்டபடி அவர் கூறுகையில், என் பேரன் முத்துகுமார் படிப்பில் கெட்டிக்காரன். அவர் மரந்தலை உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். படிப்பில் சிறந்து விளங்கியதற்கு பரிசுகள் வாங்கியுள்ளான்.
என் பேரனுக்கு திருமணம் நடத்துவதற்கு பெண் பார்த்து வந்தேன். அதற்குள் எங்களை விட்டு போய் விட்டானே என்று கதறி அழுதார்.
முத்துக்குமாரின் சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அங்கு முத்துக்குமாரின் படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு ஊர்களிலும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இன்று மாலை முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தலைவர்கள் அஞ்சலி
முத்துக்குமார் மரணச் செய்தி கேட்டதும் விரைந்து சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இலங்கை எம்.பி.சிவாஜி லிங்கம், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் இளைஞரணித் தலைவர் சுதீஷ் அஞ்சலி செலுத்தினார்
முத்துக்குமார் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டிடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.
நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமார் ஊர்வலமாக உடல் எடுத்து வரப்பட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
இன்று காலை முதல் பெரும் திரளானவர்கள் முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை ஈர்த்த மாணவர்களும், கொளத்தூர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தியவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள்தான்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications