For Daily Alerts
Just In
பள்ளிப் பேருந்து மீது மோதிய ரயில் - 6 சிறார்கள் சாவு
பெரோஸ்பூர் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில், பள்ளிக்கூட பேருந்து மீது ரயில் மோதியதில் 6 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹராஜ் என்ற கிராமத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் இந்த கோர விபத்து இன்று காலை நடந்தது.
ரயில் வருவதைக் கவனிக்காமல், பள்ளிப் பேருந்தின் டிரைவர், வேகமாக ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றதால்தான் விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
விபத்தில் சிக்கிய பேருந்து, தல்வானி பய் என்ற இடத்தைச் சேர்ந்த டிஏவி பள்ளிக்குச் சொந்தமானதாகும்.
விபத்துக்குப் பின்னர் பஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார். காயமடைந்தவர்கள் லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Story first published: Monday, February 2, 2009, 14:57 [IST]