முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்ட திருமாவளவன் கோரிக்கை
சென்னை: முத்துக்குமாருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு எடுக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் அவலநிலையை கண்டு மனம் பதறிய சென்னை கொளத்தூரை சேர்ந்த் முத்துக்குமார் என்ற வாலிபர் ஆளுனர் மாளிகை முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், முத்துக்குமாரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்யும்.
அவரது அஸ்திக் கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.
திண்டுக்கல் ரவியின் தியாகத்தை மரணத்தை காவல்துறையினர் குடும்ப பிரச்னை என திரித்து கூறி அவமதிப்பது கண்டனத்துக்கு உரியது என்றார் திருமாவளவன்.