For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கையில் திறந்தவெளி சிறை: டி.ஜி.பி. நட்ராஜ்

By Sridhar L
Google Oneindia Tamil News

வேலூர்: சிவகங்கையில் ரூ 2.27 கோடி செலவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது என சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் தெரிவித்துள்ளார்.

லேலூர் மத்திய சிறையில் ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் திறந்து வைத்தார்.

பின்பு சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் சிங்காநல்லூர், சேலம் ஆகிய இடங்களில் திறந்தவெளி சிறை உள்ளது. அதே போன்று சிவகங்கையில் ரூ 2.27 கோடி செலவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது.

சிறையில், திறமையாக வேலை செய்யும் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 60ம், மற்றவர்களுக்கு ரூ 45 மற்றும் ரூ 35 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஊதியத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சிறைத் தோட்டங்களில் வேலை செய்யும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு வாங்கித் தரப்படும்.

கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக ஸ்ரீபெரும்புதூரில் காப்பகம் அமைக்கப்படும். தமிழகத்தில் மேலும் 11 இடங்களில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

சிறைகளில் இடப்பற்றாக்குறைய சரி செய்ய முக்கிய இடங்களில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் சிறைகளை நவீனப்படுத்த ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X