தலைமை நீதிபதியை ஆம்புலன்ஸில் வந்து சந்திக்கத் தயார் - கருணாநிதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வன்முறை தொடர்பாக எனது நேரடி விளக்கம் தேவை என தலைமை நீதிபதி கருதினால் அவரை ஆம்புன்ஸில் வந்தாவது சந்திக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வன்முறையைத் தொடர்ந்து தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயவுக்கு முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து கடிதம் எழுதினார்.
அதில்,
எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது. இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன்.
இந்த பிரச்சினையில், வக்கீல்கள் மீது தவறு உள்ளதா அல்லது போலீசார் மீது தவறு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கும், இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும், உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இந்த பிரச்சினையில் நீதி நிலை நாட்டப்படவும், அமைதி ஏற்படவும், தங்களது மதிப்புமிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும், தாங்கள் என்னை பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications